Wednesday, May 11, 2011

சிவ தோற்றத்தின் அடையாளங்கள்.

சிவ தோற்றத்தின் அடையாளங்கள். மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பெற்ற தியானத்திலுள்ள பசுபதி சின்னத்தின் மூலமே சிவவழிபாடு. அப்பகுதியிலேயே முதன்முதலில் சிவவழிபாடு நடைபெற்றிருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்றாகும். சிவனை வழிபடும் வழக்கம் பழங்காலத்திலும் நம்மிடம் இருந்துள்ளது. சிவனை வழிபடும் இடங்களிலெல்லாம் திராவிடர்களின் பதிவுகள் இருக்கின்றன. சிந்து சமவெளி நாகரிகத்திலும் நம்முடைய மூத்தோர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று செந்தமிழ் செம்மொழி மாநாட்டில் கூறினார்.

சிவ பெருமானின் தனித்துவ அடையாளங்களாக கீழ்வருவன கொள்ளப்படுகின்றன.இவ் வடிவங்களையும் இறைவனது குணங்களைனையும் பற்றித் தேவாரப் பதிகங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.

நெற்றிக்கண் காணப்படல்.
கழுத்து நிலநிறமாக காணப்படல்.
சடைமுடியில் பிறைநிலாவைக் கொண்டிருத்தல்.
நீண்ட சுருண்ட சடாமுடி
தலையில் கங்கை நதி பாய்ந்து கொண்டிருத்தல்.
உடல் சாம்பல் நிறமாக இருத்தல்.
புலித்தோலினை ஆடையாக அணித்திருத்தல்.
கழுத்தினைச் சுற்றி பாம்பு காணப்படல்.
கையினில் உடுக்கை,திரிசூலம் தாங்கியிருத்தல்.
நந்தியினை(எருது) வாகனமாகக் கொண்டிருத்தல்.

சிவனின் ஜந்து முகங்கள்சதாசிவ மூர்த்தியின் ஆயிரத்தில் ஒரு கூறிலிருந்து தோன்றியவரே மகேசர். மகேச மூர்த்தி மகேச வடிவங்கள் என்ற பெயரிலும் அழைக்கப் படுகிறார். இவரே படைத்தல், காத்தல், ஒடுக்கல் ஆகியவற்றை நேரடியாக இயற்றுவதாய்ச் சொல்வார்கள். உருவத் திருமேனியுடன் காட்சி அளிக்கும் இவரின் வடிவங்களே இனி நாம் காணப் போவது. இந்த மகேச மூர்த்தி அடியவர்களைத் தண்டிக்கவும், அடியவர்களுக்கு உதவிகள் செய்து காக்கவும் பல வடிவங்களில் எடுத்துப் பல திருவிளையாடல்களைப் புரிகின்றார். இவரை நின்ற கோலம், அமர்ந்த கோலம், நாட்டியம் ஆடும் கூத்துக்கோலம், வாகங்களில் ஏறி வரும் கோலம், உக்கிரமாய் இருத்தல், சாந்த ஸ்வரூபியாய்க் காட்சி அளித்தல் எனப் பல்வேறு நிலைகளிலும் அதாவது சதாசிவ மூர்த்தியின் மகேச மூர்த்திக்கு ஒரு முகம், மூன்று கண்கள், ஜடா மகுடம், நான்கு கரங்கள், ஆகியவற்றுடன் காட்சி அளிக்கின்றார். பின்னிரு கரங்களில் மானும், மழுவும் காணப்படும். முன்னிரு கரங்கள் அபயஹஸ்தமாகக் காண்கின்றது. மகேச்வர வடிவங்களைச் சதாசிவ மூர்த்தியின் ஐந்து முகங்களுக்கும் பொருந்துமாறு 25 விதங்களில் குறிப்பிடுவார்கள்.

1.சத்யோ ஜாதம்:சத்யோஜாத முகத்தில் இருந்து

1.லிங்கோத்பவர்
2.சுகாசனர்
3.உமா மகேசுவரர்
4.சங்கர நாராயணர்
5. அர்த்த நாரீசுவரர்.

2.வாமதேவம்:வாமதேவ முகத்தில் இருந்து

1.கங்காளர்
2.சக்ரதானர்
3.கஜமுக அனுக்ரஹர்
4,.சண்டோ அனுக்ரஹர்
5.ஏக பாதர்

3.அகோரம்:அகோர முகத்தில் இருந்து

1.கஜ சம்ஹார மூர்த்தி
2.வீரபத்ரர்
3.தட்சினா மூர்த்தி
4,கிராத மூர்த்தி
5.நீலகண்டர்

4.தற்புருடம்: தத்புருஷம் என்னும் முகத்தில் இருந்து தோன்றியவர்கள்

1.பிட்சாடன மூர்த்தி
2.காமதகனர்
3.கால சம்ஹாரர்
4.ஜலந்தரவதர்
5.திரிபுராந்தகர்

5.ஈசானம்: ஈசான முகத்தில் இருந்து தோன்றியவர்கள் -

இம்முகத்தின் மூலம் ஆகம இரகசியப்பொருளினைக் கேட்டு அறிந்தனர் அறுபத்தாறு முனிவர்கள்.
1.சோமாஸ்கந்தர்
2.நடராஜர்
3.ரிஷபாரூடர்
4.கல்யாண சுந்தரர்
5. சந்திர சேகரர்

உலகத்தார் உய்யும் பொருட்டும், உலகைக் காக்கவும் ஈசன் பல வடிவங்களை எடுப்பதாய்ச் சிவனடியார்கள் கூற்று. அவை மூன்று வகைப் படும். அவை போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம். இதில் போகம் இன்பத்தையும், யோகம், அமைதியையும், வேகம், கோபத்தையும் குறிக்கின்றன. பொதுவாக மகேச வடிவத்தை இல்லறத்தாரே பெரிதும் பூசை செய்வர் என்பது வழக்கு. அதற்கேற்பத் திருமூலரின் திருமந்திரத்திலும்,ஏழாம் தந்திரம் பாடல் எண் மூன்று, அத்தியாயம் 13. மாகேசுர பூஜையில் இவ்வாறு கூறுகின்றார்:

இலிங்கோற்பவர்சிவனது உருவத்திருமேனிகளில் ஒன்றாகும்.கருவறையின் பின் புறமாக மேற்கு நோக்கி அமைந்திருக்கும். இறைவனது பாதமும் முடியும் கண்ணிற்குப் புலப்படாத வகையில் இவ் வடிவம் அமைந்திருக்கும்.

சிவனது 63 உருவத்திருமேனி

1. சந்திரசேகரர்
2. உமாமகேஸ்வரர்.
3. ரிஷபாரூடர்
4. நடராஜர்
5. கல்யாணசுந்தரர்
6. பிட்சாடனர்.
7. காமதகனார்
8. கால சம்ஹாரர்
9. திரிபுராந்தகர்
10. சலந்தரர்.
11. கஜாசுர சம்ஹாரர்
12. தக்க்ஷ யக்ஞவதர்.
13. ஹரியர்த்தர்.
14. அர்த்தநாரீஸ்வரர்.
15. கிராதகர்.
16. கங்காளர்.
17. சண்டேச அநுக்கிரஹர்
18. நீலகணடர்.
19. சக்ரப்ரதர்.
20. விக்னப்ரசாதர்.
21. சோமாஸ்கந்தர்.
22. ஏகபாதர்.
23. சுகாசனர்.
24. தட்சணாமூர்த்தி.
25. லிங்கோத்பவர்.
26. ரிஷபாந்திகர்.
27. அகோரவீரபத்ரர்.
28. அகோராஸ்ரமூர்த்தி.
29. சக்ரதானஸ்வரூபர்.
30. சிவலிங்கம்.
31. முகலிங்கேஸ்வரர்.
32. சர்வஸம்ஹாரர்
33. ஏகபாத திரிமூர்த்தி.
34. திரிபாதமூர்த்தி
35. ஜ்வரஹரேஸ்வரர்.
36. ஊர்த்துவதாண்டவர்
37. வராக் ஸம்காரி .
38. கூர்மஸம்ஹாரி.
39. மச்சஸம்ஹாரி.
40. சரபேசர்
41. பைரவர்.
42. சார்த்துலஹரி.
43. லகுளீசர்.
44. சதாசிவர்.
45. உமேசர்.
46. புஜங்கலளிதர்
47. புஜங்கத்ராசர்.
48. கங்காதரர்.
49. கங்காவிசர்ஜனர்.
50. யக்ஞேஸ்வரர்
51. உக்ரர்
52. ஆபதோத்தாரணார்
53. ஷேத்ரபாலர்
54. கஜாந்திகர்
55. அச்வாரூடர்
56. கௌரீவரப்ரதர்
57. கௌரீலீலா சமன்விதர்
58. கருடாந்திகர்
59. பிரம்ம சிரச்சேதர்
60. ரக்தபிக்க்ஷா ப்ரதானர்.
61. சிஷ்யபாலர்
62. ஹரிவிரிஞ்சதாரணர்
63. சந்தியா நிருத்தர்.
------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment